தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்
தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று(29) ஞாயிற்றுக்கிழமை மாலை உத்தரவிட்டார்.
இராமேஸ்வரம் கடற்றொழில் துறை முகத்தில் இருந்து சென்று இன்று (29) ஞாயிறு அதிகாலை எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறி மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 8 இராமேஸ்வர கடற்றொழிலாளர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த கடற்றொழிலாளர்களை கடற்படையினர் தலைமன்னார் கடற்கடையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
விளக்கமறியல்
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளை தொடர்ந்து குறித்த கடற்றொழிலாளர்களை மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிரலப்படுத்தியுள்ளனர்.
இதன்போது, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
