ரணிலின் கைதாவதை முன்கூட்டியே அறிவித்த யூடியூபர்! அர்ச்சுனாவையும் வசை பாடினார்..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படாவிட்டால் தனது இணையத்தளத்தை நிறுத்தி விடுவதாக தெரிவித்த சுதா என்ற யூடியூபர், தன்னை தகாத வார்த்தைகளில் திட்டித்தீர்த்த காணொளியை நாடாளுமன்ற ஒழுக்காற்று குழுவில் சமர்ப்பித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (22) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சுதா என்பவர் அண்மையில் பிரதமர் ஹரிணியிடம் கை குலுக்கி கதைக்கும் காணொளி இருக்கிறது.
அத்தோடு அவர் ஜனாதிபதியுடன் நெருங்கி பழகியவர். அவர் தான் தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பரப்புச் செயலாளர் போல் திரிகிறார். அதனால் ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அத்தோடு தேசிய மக்கள் சக்தியின் முன்வரிசை உறுப்பினர்கள் காரில் வருகின்றனர். பின்வரிசை உறுப்பினர்கள் ஊருக்கு செல்ல காரில்லை என என்னிடம் கூறுகின்றனர். இதையெல்லாம் நினைத்தால் வெட்கமாக இருக்கிறது, பெயர் குறிப்பிட நான் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

புடினை சந்திப்பதற்கு முன் பாதுகாப்பு உத்தரவாதத்தை கேட்கும் ஜெலென்ஸ்கி! இடம் இதுவாக இருக்கலாம் News Lankasri
