மோடியின் கொள்கையை பின்பற்றிய ராஜபக்சக்கள்: இரத்தத்தின் மத்தியில் இலங்கையின் ஆட்சி

Narendra Modi Easter Attack Sri Lanka Rajapaksa Family
By Dharu Sep 09, 2023 08:38 AM GMT
Report

மோடியின் மத எதிர்ப்பு கொள்கையை பின்பற்றி ராஜபக்சக்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தனர் என மக்கள் அமைப்பின் செயற்பாட்டாளர் ஹெஸான் மாலக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாம் மிகவும் தெளிவாக கூறுகின்றோம். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவால் போன்றவர்களுடன் ராஜபக்சக்கள் பழகினார்.

அவ்வாறு இல்லையென்றால் சிவசேனா இயக்கத்தை ஆரம்பித்த சுப்ரமணியம் சுவாமி போன்றவர்கள் ராஜபக்சக்களின் நெருக்கமானவர்களாக காணப்படுகின்றனர்.

பிஜேபி அல்லது பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை நடைமுறைகளையே பின்பற்றினர்.

தமிழர் தாயகத்தின் அடையாளமாக விளங்கும் கற்பகதருவின் இன்றைய நிலை

தமிழர் தாயகத்தின் அடையாளமாக விளங்கும் கற்பகதருவின் இன்றைய நிலை


ராஜபக்சகளின் அண்ணாவான மோடி

அஜித் தோவாலின் ஆலோசனைக்கு அமையவே இந்தியாவில் முஸ்லிம் விரோத கொள்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதன் ஊடாகவே மோடி தனது ஆட்சியை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டார்.

உலாமா தாக்குதலுக்கு புண்ணியம் சேரவே மோடி 2019 ஆம் ஆண்டு தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டார்.

மோடியின் கொள்கையை பின்பற்றிய ராஜபக்சக்கள்: இரத்தத்தின் மத்தியில் இலங்கையின் ஆட்சி | Rajapaksa In Sri Lanka Political Crisis

எனவே ராஜபக்சகளின் அண்ணாவாக மோடியின் அனுபவங்களையே இவர்கள் பெற்றுக் கொண்டனர்.

இலங்கையில் இரத்தத்தின் மத்தியில் ஆட்சி நடத்தும் அணுகு முறையை மோடியிடமிருந்து ராஜபக்சக்கள் கற்றுக் கொண்டனர்.

செனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் நாட்டின் தற்போதைய புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சாலேவின் பெயர் சர்ச்சைக்குரிய விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச சுரேஷ் சாலேவை மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தி இராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியாக கடமையாற்றிய அவரை நாட்டின் புலனாய்வு பிரிவு தலைமை அதிகாரியாக நியமித்தார்.

சதித்திட்டத்தின் மையப் புள்ளியாக சிறைச்சாலை! சனல் 4 காணொளியால் மற்றுமொரு சர்ச்சை (Video)

சதித்திட்டத்தின் மையப் புள்ளியாக சிறைச்சாலை! சனல் 4 காணொளியால் மற்றுமொரு சர்ச்சை (Video)

இலங்கையில் முதல் தடவையாக பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் பதவி ஒன்று இராணுவ அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நிலந்த ஜெயவர்த்தன பொலிஸின் இரண்டாம் நிலை தலைவராகவும், தேசபந்து போன்றவர்கள் அதிகாரபூர்வமற்ற பொலிஸ் மா அதிபராக செயற்பட்டு வருகின்றார்.

சுயாதீனமான விசாரணை

எனவே இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நாம் திருப்தி அடைய முடியாது.

நாம் ரணில் விக்ரமசிங்வை வலியுறுத்துகின்றோம். அவருக்கு சவால் விடுக்கின்றோம். இந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் குறித்த சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்படும் வரையில் சுரேஷ் சாலேவை பணியிடை நீக்கம் செய்யுமாறு கோருகின்றோம்.

மோடியின் கொள்கையை பின்பற்றிய ராஜபக்சக்கள்: இரத்தத்தின் மத்தியில் இலங்கையின் ஆட்சி | Rajapaksa In Sri Lanka Political Crisis

சுரேஷ் சாலேவிற்க்கு இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட வேண்டுமாயின் உடனடியாக தற்காலிக அடிப்படையில் பதவியில் இருந்து அவர் விலகிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் இந்த விசாரணைகள் தொடர்பில் எமக்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் திருப்தி அடைய முடியாது. நம்பிக்கை கொள்ள முடியாது.

போலியான போராட்டம் நடத்திய, நாமல் குமாரவின் நாடகங்கள், தர்கா நகர் சம்பவத்தை மேற்கண்ட, திகன சம்பவங்களை மேற்கொண்ட, பொரளை தேவாலயத்தில் குண்டு வைத்தமை உள்ளிட்ட நாடகங்களை மேற்கொண்ட கும்பல் யார் என்பது இந்த நாட்டின் அனைவருக்கும் தெரியும்.

சீனாவில் ஐபோன் பயன்படுத்த தடை

சீனாவில் ஐபோன் பயன்படுத்த தடை

இந்த அனைத்து விடயங்களையும் ஒரு தரப்பினர் மேற்கொள்ள உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை மட்டும் ஐஎஸ் தீவிரவாதிகள் மேற்கொண்டார்கள் என நம்பும் அளவிற்கு நாம் அடி முட்டாள்கள் கிடையாது என்பதை நாம் இந்த இடத்தில் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.'' என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆவணப்படம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை

இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆவணப்படம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை

மொராக்கோ நிலநடுக்கம்: ஆயிரத்தை கடந்த உயிரிழப்புக்கள்- சுனாமி குறித்து வெளியான தகவல்

மொராக்கோ நிலநடுக்கம்: ஆயிரத்தை கடந்த உயிரிழப்புக்கள்- சுனாமி குறித்து வெளியான தகவல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US