நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு மேல் மழை
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லி மீற்றருக்கு மேல் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாணம் மற்றும் வவுனியா, மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேல் மற்றும் தென் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சபரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனி மூட்டம் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri