கொழும்பில் பயணிகளுடன் மூடப்பட்ட தொடரூந்து நிலையங்கள் - சிக்கி தவித்த பயணிகள்
தொடரூந்து தொழிற்சங்கங்களினால் இன்று ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தம் காரணமாக நுகேகொட தொடரூந்து நிலையத்தின் வெளியேறும் வாசலுக்குப் பூட்டுப் போடப்பட்டு மூடப்பட்டுய்யது.
இதனால், அவசவெல்லையில் இருந்து கோட்டை நோக்கிச் சென்ற தொடரூந்தில் ஏற நுகேகொட வந்த பயணிகள் தொடரூந்து நிலையத்திலிருந்து வெளியேற முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக, தொடரூந்தில் வந்த பயணிகள் தொடரூந்து மேடையிலிருந்து பாதையில் இறங்கி, தண்டவாளங்களின் ஊடாக நடந்து சென்று நிலையத்திலிருந்து வெளியேறிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
மிகவும் பரிதாபகரமான நிலை
தொடரூந்தில் வந்த வயதான பெண்களினால் தொடரூந்து மேடையிலிருந்து தண்டவாளத்திற்கு இறங்க முடியாமல் போனமையால் அவர்கள் மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.

சில தொடரூந்து நிலையங்களில் ஊழியர்கள் இல்லாவிட்டாலும் நிலையங்கள் மூடப்பட்டிருக்கவில்லை.
எனினும் நுகேகொடை தொடரூந்து நிலையத்தில் மட்டும் வெளியேறும் வாசல் மூடப்பட்டிருப்பது மிகப்பெரிய தவறாகும் எனவும் பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.