'டித்வா' சேதப்படுத்திய தொடருந்து பாதைகளை புனரமைக்க இந்திய உதவி
'டித்வா' சூறாவளியில் பாதிக்கப்பட்டுள்ள தொடருந்து பாதைகளை இந்திய நிதி உதவியுடன் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, ரம்புக்கனையிலிருந்து பேராதனை வரையிலான தொடருந்து பாதையை இந்தியா வழங்கிய கடன் வசதியைப் பயன்படுத்தி புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரம்புக்கனை-கடுகன்னாவ வரையான பாதை புனரமைப்புக்காக மதிப்பிடப்பட்ட செலவு 74 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
மதிப்பிடப்பட்டுள்ள செலவு
கடுகன்னாவ-பேராதெனிய தொடருந்து பாதையின் கட்டுமானத்திற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வடக்கு தொடருந்து சேவையின் மஹவ-ஓமந்தை பிரிவை புனரமைக்க இந்திய உதவியுடன் மதிப்பிடப்பட்ட 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்படும்.

இந்தப் பிரிவின் புனரமைப்புக்கான நிதியை மானியம் மூலம் வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
'டித்வா' நாடாளுமன்ற தேர்வுக் குழு தலைமை எதிர்க்கட்சிக்கு வேண்டும்: கயந்த கருணாதிலக்க எம்.பி கோரிக்கை
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri