கட்சியில் இருந்து வெளியேறுங்கள்: சஜித் எச்சரிக்கை!
"நாம் பதவிகளுக்காக அரசியல் செய்யவில்லை. மாறாக மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியல் களத்தில் இருக்கின்றோம்" என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (01.05.2023) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "அரச பதவிகளுக்காக அலையும் சில மக்கள் பிரதிநிதிகளும் இருக்கவே செய்கின்றனர். அப்படியானவர்களுக்குத் தெளிவாக ஒரு விடயத்தைக் குறிப்பிடுகின்றேன்.
எமது கட்சியில் இடமில்லை
எல்லா
பக்கங்களிலும் கால் வைக்க வேண்டாம். ஒன்று கட்சியில் இருங்கள், இல்லையேல்
வெளியேறுங்கள்.
இரட்டை நிலைப்பாடு அரசியல் நடத்த வேண்டாம். கொள்கை அற்றவர்களுக்கு எமது
கட்சியில் இடமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
