திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் மகாராணியின் இறுதி சடங்கு
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியை நாளை நடைபெறவுள்ள நிலையில், இறுதிச்சடங்கு பிரித்தானியா முழுவதும் சுமார் 125 திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதற்கமைய, பூங்காக்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் இறுதிச்சடங்கை காண திரைகள் அமைக்கப்படும் என்றும், ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பொது விடுமுறை அறிவிப்பு
1997ல் இளவரசி டயானாவின் இறுதிச்சடங்கு, 2012ல் லண்டன் ஒலிம்பிக்ஸ் என பிரித்தானிய வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
ராணியின் இறுதிச்சடங்கிற்கு அதிக மக்கள் வரக்கூடும் என்பதால் பலத்த ஏற்பாடுகளை செய்திருக்கும் அரசாங்கம் நாளை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

பிரித்தானிய ராணி 2 ஆம் எலிசபெத் தனது 96 ஆவது வயதில் கடந்த 8 ஆம் திகதியன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
பொதுமக்களின் அஞ்சலி

இதனையடுத்து, அவரது உடல் ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு லண்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அரங்கில் ராஜ மரியாதையுடன் கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள எலிசபெத்தின் உடலுக்கு, ஏராளமானோர் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
May you like this Video
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan