எரிபொருள் QR மோசடி! நூற்றுக்கணக்கான தொலைபேசி இலக்கங்கள் அடையாளம்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை
எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு முறைமையில் இதுவரை சுமார் 60 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசாங்க ஊடகப்பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் பயன்பாடு
ஒரு நாடாக நிச்சயமாக எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும், இதற்கு ஒரு தீர்வாகவே கியூஆர் குறியீடு (QR code) அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களில் 5,995,365 பேர் பதிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் இரண்டு மில்லியன் புதிய பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இன்று முதல் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருந்தாலும், அனைவரும் இதை உணர்வுபூர்வமாக சிந்தித்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்றும், எரிசக்தி பயன்பாட்டைக் குறைப்பதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்து, இது தொடர்பாக ஒரு முன்னுதாரணத்தை அமைக்குமாறு அனைத்து அமைச்சக செயலாளர்களுக்கும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சுமார் 20 இலட்சம் பேர் புதிதாகப் பதிவு செய்துள்ளதாகவும், QR முறைமையில் பதிவு செய்ய முடியாது எனப் பெறப்பட்ட அனைத்து முறைப்பாடுகளுக்குமான தொழில்நுட்பக் குறைபாடுகள் இதுவரையில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.
எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை
இதேவேளை, QR குறியீட்டை சட்டவிரோதமான முறையில் தரவிறக்கம் செய்த 153 தொலைபேசி இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam