தொடர் தோல்வியில் பஞ்சாப் கிங்ஸ் அணி! புள்ளிப்பட்டியலில் எத்தனையாவது இடம்..
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் ஐதராபாத்தில் இன்று(6) நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் ந்துவீச்சை தேர்வு செய்தார்.
சன் ரைசர்ஸ் ஐதராபாத்
இதனை தொடர்ந்து, ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்கம் முதல் ஐதராபாத் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தனர்.
ஐதராபாத் அணியில் கிளாசன் 55 ஓட்டங்களும் , இஷான் கிஷன் 69 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ஐதராபாத் அணி 235 ஓட்டங்கள் எடுத்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணி
236 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
எனினும், கூப்பர் கன்னோலி நிலைத்து ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்கள் குவித்தார்.

ஆனால், மறுபுறம் விக்கெட்டுகள் சீராக வீழ்ந்தன. இதனையடுத்து, 20 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ஓட்டங்களை எடுத்தது.
ஐதராபாத் சார்பில் பேட் கம்மின்ஸ் மற்றும் ஷிவாங் குமார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனால், பஞ்சாப்பை 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப்கிங்ஸ் அணி தோல்வியை சந்திருக்காத நிலையில் கடந்த 3 போட்டிகளாக தோல்வியை சந்தித்துள்ளது.
இதனால் 13 புள்ளிகளுடன் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.