வித்யா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி சிறையில் உயிர் மாய்ப்பு..
புதிய இணைப்பு
சிறைச்சாலைக்குள் உயிரை மாய்த்துக் கொண்ட வித்யா கொலை வழக்கின் மரண தண்டனை கைதியின் உடல் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பூபாலசிங்கம் ஜெயகுமார் என்ற இந்த கைதி, சிறைச்சாலைக்குள்ளேயே இன்று காலை தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதனையடுத்து நீதவான் சென்று உடலைப் பார்வையிட்டதன் பின்னர், தற்போது சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு வைத்திய பரிசோதனைகளின் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
புங்குடுதீவு - வித்யா படுகொலை வழக்குடன் தொடர்புடைய மரண தண்டனை கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
யாழ். சிறைச்சாலையில் இன்று காலை அவர் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உயிர் மாய்ப்பு..
பூபாலசிங்கம் ஜெயகுமார் என்ற கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வித்யா படுகொலை வழக்கில் மரண தண்டனைப் பெற்றவர்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வாசிப்பிற்காக இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட இருந்த நிலையிலேயே குறித்த கைதி தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

தாஜுதீன் கொலை வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மகிந்த ராஜபக்சவின் வீடு: கோப் குழுவில் வெளியான சர்ச்சைக்குரிய தகவல்