இலங்கை வந்த மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
மூன்று வெளிநாட்டு விமானப் பயணிகள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 31, 36 மற்றும் 40 வயதுடைய சீன நாட்டு வணிகர்கள் என தெரியவந்துள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து வந்த இரகசியம் - நீலனின் அவசர கடிதம்! தலைமை எடுத்த முடிவு..
பசுமை வழித்தடம்
சந்தேகநபர்கள் சிகரெட் தொகையை, பசுமை வழித்தடம் ஊடாக வெளியே கொண்டு செல்ல முயன்ற போதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்க அதிகாரிகளின் அவதானத்தை திசை திருப்புவதற்காக, சந்தேகநபர்கள் இந்த சிகரெட் தொகையை சீனாவில் இருந்து கொள்வனவு செய்து மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
சுங்க அதிகாரிகள்
இதன்போது அவர்கள் கொண்டு வந்த 06 பயணப் பொதிகளுக்குள் 40,000 சிகரெட்டுகள் அடங்கிய 202 சிகரெட் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த சிகரெட் தொகையின் மொத்தப் பெறுமதி சுமார் 60 லட்சத்து 60 ஆயிரம் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தற்போது கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தாஜுதீன் கொலை வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மகிந்த ராஜபக்சவின் வீடு: கோப் குழுவில் வெளியான சர்ச்சைக்குரிய தகவல்
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan
10-வது சர்வதேச அனிமே விருது விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா.. இந்திய சினிமாவிற்கு கிடைத்த கௌரவம் Cineulagam
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam