லிஃப்ட் இயக்குபவரை தாக்க முயன்ற பூஜித! நீதிமன்றுக்கு வழங்கியுள்ள வாக்குமூலம்
பொலிஸ் தலைமையகத்தில் உள்ள லிஃப்ட் இயக்குபவரை தாக்க முயன்றதாக(2017) முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார்.
கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதே அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
நீதவான் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தபோது பின்வரும் கருத்துக்களை பூஜித முன்வைத்துள்ளார்.
“லிஃப்ட் இயக்குபவரை தண்டிக்கும் அல்லது துன்புறுத்தும் நோக்கத்துடன் தான் எதையும் செய்யவில்லை. சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்த போதிலும், லிஃப்ட் இயக்குபவர் அறிவுறுத்தல்களை மதிக்காமல் செயல்பட்டமை குறித்தே விசாரித்தேன்.
துன்புறுத்தல் நோக்கம்
தனிப்பட்ட பழிவாங்கல் அல்லது துன்புறுத்தல் நோக்கத்துடன் தான் எதையும் செய்யவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி என்னை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து கட்டாய ஓய்வுக்கு உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தை நான் எதிர்கொண்டபோது முன்னதாக ஓய்வுபெற்ற குறித்த லிஃப்ட் இயக்குபவர் மீண்டும் கொண்டுவரப்பட்டு 2019 ஆம் ஆண்டு சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார்.
அப்போதே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக தான் நம்புகின்றேன். நான் வேலையில்லாமல் இருந்தபோது இந்த முறைப்பாடு குற்றப் புலனாய்வுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தேசிய கீதம் இசைக்கப்படும்போது லிஃப்டை இயக்கக்கூடாது என்று அப்போது சுற்றறிக்கை இருந்தபோதிலும், ஏப்ரல் 11, 2017 அன்று அறிவுறுத்தல்கள் புறக்கணிக்கப்படுவதாக தனக்குத் தெரிவிக்கப்பட்டது.
அதை ஆய்வு செய்யச் சென்றபோது, லிஃப்ட் இயங்கி வருவதாகவும், அது யாருக்காக இயக்கப்படுகிறது என்று லிஃப்ட் இயக்குபவரிடம் விசாரித்தேன்.
தனிப்பட்ட முறையில் பழிவாங்கும், தண்டிக்கும் அல்லது துன்புறுத்தும் நோக்கத்துடன் தான் எதையும் செய்யவில்லை. சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் அங்கு சென்று தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
தன் மீதான வெறுப்பு மற்றும் பக்கசார்பான விடயங்களால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டது. மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிறகு நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களுக்காக என்னை மேலும் துன்புறுத்தும் நோக்கத்துடன் இந்த வழக்குதாக்கல் செய்யப்பட்டது.
சுற்றறிக்கையின்படி வேலை செய்யுமாறும், தனிப்பட்ட பழிவாங்கலுக்காக தண்டிக்கவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது என்றும் பின்னர் தனக்குச் சொல்லப்பட்டது.
என் மீதான சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுகளை 6 வருடங்களாகக் கேட்ட பிறகும், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்ட விதம் மற்றும் சி.ஐ.டி அதிகாரிகளின் அணுகுமுறையால் நான் இன்னும் கவலைப்படுகிறேன்.
அதுதான் எனது விதியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, குற்றவியல் வற்புறுத்தல் மற்றும் குற்றவியல் மிரட்டல் செய்ததாகக் கூறி பொலிஸ் தலைமையகத்தில் உள்ள லிஃப்ட் இயக்குபவருக்கு ஆதரவாக தாக்கல் செய்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சிசிரிவி காட்சிகள், கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன் விசாரணைக்கு வந்தன.
இதன்பின்னர் பின்னர் மேலதிக ஆதாரங்களை சேகரிக்க வழக்கை ஜூலை 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
