பயணத்தடை தளர்வின் பின்னர் மக்கள் செயற்பட வேண்டிய விதம்! வெளியானது சுகாதார வழிகாட்டி
யணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் செயற்பட வேண்டிய முறை குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய, ஒரு வீட்டில் இருந்து இருவர் மாத்திரமே வௌியேற முடியும் என குறித்த சுகாதார வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட வாடகை வாகனங்களில் இருவரை மாத்திரமே ஏற்றிச் செல்ல முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 50 சதவீத திறன் கொண்ட பொது போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.அத்தியாவசிய சேவைகளில் இணைக்கப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே பொது போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள், பணிகளுக்காக அத்தியாவசிய பணியாளர்களை மட்டுமே வரவழைக்க முடியும். மொத்த வர்த்தகத்திற்கு மட்டுமே பொருளாதார மையங்கள் திறந்திருக்கும்.
அதே நேரத்தில் வெதுப்பகங்களை இயக்க முடியும். திருமண செயல்பாடுகள் எதுவும் அனுமதிக்கப்படாது. பத்து விருந்தினர்களுடன் திருமண பதிவுகள் அனுமதிக்கப்படும்.
இறுதிச் சடங்குகளில் 15 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. இறந்த ஒருவரின் உடலம் விடுவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இறுதி சடங்குகள் முடிக்கப்பட வேண்டும்.
விருந்தகங்கள், விருந்தினர் இல்லங்கள், உணவகங்கள், இரவு கேளிக்கை விடுதிகள் மற்றும் மதுபானகங்கள் மூடப்பட்டிருக்கும், பொதுக் கூட்டங்களும் அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை அதிகாலை 4.00 மணிக்கு தற்போது அமுலில் உள்ள பயணத் தடையை தளர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.