யாழின் முக்கிய நிகழ்வொன்றில் இந்திய துணைத் தூதுவருக்கு ஆசனம் ஒதுக்கப்படாமையால் எழுந்த சர்ச்சை!
யாழில் இடம்பெற்ற சிவாஜி கணேசனின் நூல் வெளியீட்டு விழாவில் யாழ்.இந்திய துணை தூதர் ராகேஷ் நடராஜ் ஜெபாஸ்கரனுக்கு ஆசனம் ஒதுக்கப்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சிவாஜி கணேசனின் மகன் கலந்து கொண்ட, இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு யாழ். இந்திய துணை தூதர் பெயர் குறிப்பிடப்பட்டு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது அதிதிகளுக்கான முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்ட நிலையில் துணை தூதுவருக்கு எந்தவிதமான ஆசனமும் ஒதுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஆசனப்பிரச்சினை
இந்நிலையில் நிகழ்வுக்கு வந்த துணை தூதர் முன்வரிசை ஆசனம் இல்லாமல் அவதிப்பட்ட நிலையில் யாழ். பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சற்குணராஜா தனது இருக்கையை விட்டு எழுந்து, யாழ். இந்திய துணை தூதரை அமருமாறு கூறியமையை அவதானிக்க முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊடகவியலாளர்களும் குறித்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த பெண்மணி ஒருவர் அடையாள அட்டையை காட்டுமாறு கூறியதுடன் இல்லாவிட்டால் அங்கிருந்து வெளியேறுமாறு கூறிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வைத்தியசாலைக்கு விஜயம்
இதேவேளை சிவாஜி கணேசனின் மூத்த புதல்வர் இராம்குமார் நூல் வெளியீட்டு நிகழ்வுக்காக யாழ்ப்பாணத்திற்காக விஜயம் மேற்கொண்டுள்ள போது மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கும் சென்றுள்ளார்.
பல வருடங்களுக்கு முன்னர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இலங்கைக்கு வருகை தந்த போது, குறித்த வைத்தியசாலைக்கு நிதி உதவி வழங்கிய போது அங்கு ஒரு மாமரத்தினையும் நட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் அவரது மகன் ராம்குமார் குறித்த மாமரத்தினை பார்வையிட்டதுடன் நினைவுக்கல்வெட்டினையும் திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan
