யாழில் நடிகர் திலகத்தின் நூல் வெளியீட்டு விழாவில் குழப்பம் விளைவித்த பெண்
யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சிவாஜி கணேசன் தொடர்பான நூல் அறிமுக நிகழ்வில் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அவமரியாதை செய்து ஏற்பாட்டாளர்கள் வெளியேற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் நூலின் அறிமுக விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை 9.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நுாலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர்களுக்கும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் சென்றிருந்தனர்.
ஊடகவியலாளர்களுடன் முரண்பாடு
நிகழ்வில் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்ற நேரத்தில் அங்கு நின்ற ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த பெண்ணொருவர் ஊடகவியலாளர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் நீங்கள் ஊடகவியலாளர்களா, காணொளி எடுக்க வேண்டாம் நிகழ்வு மண்டபத்தை விட்டு வெளியேறுங்கள் என ஊடகவியலாளரிடம் கடும் தொனியில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த ஏனையவர்களும் மெளனமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் அனைவரும் நிகழ்வு மண்டபத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுத்து விட்டு ஏற்பாட்டாளர்களே நிகழ்வில் அவமரியாதை செய்தமை ஊடகவியலாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam

நிபந்தனையுடன் சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை: ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..லண்டனில் தெரிவித்த அதிகாரிகள் News Lankasri

பாகிஸ்தானுக்கு அடுத்த நெருக்கடி... இந்த நாட்டின் முடிவால் இந்தியாவுடன் கைகோர்க்கும் சீனா News Lankasri
