நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் வருகை (Video)
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் கணேசன் உள்ளிட்ட குழுவினர் இன்று யாழ்.பலாலி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நாளை சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான ஆய்வுநூல் ஒன்றினை வெளியிடுவதற்கும் பட்டிமன்றம் ஒன்றினை நடத்துவதற்கும் குறித்த வருகை இடம்பெற்றுள்ளதாக சிவாஜி கணேசனின் மகன் தெரிவித்துள்ளார்.
சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூலினை முனைவர் மருதமோகன் நாளைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வெளியிடவுள்ளார்.
நடைபெறவுள்ள பட்டிமன்றம்
அத்துடன் சிவாஜி கணேசனின் வெற்றிக்கு காரணம் அவரது வசனமா? அல்லது உடல் மொழியா? என்ற தலைப்பிலான பட்டிமன்றமும் இடம்பெறவுள்ளது.
கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரியின் முதல்வர் ச.லலீசன் தலைமையில் இடம்பெறும் இந்த பட்டிமன்றத்தில் கரூர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்களான வடிவேலு, சுதா தேவி, சுசிலா சாமி அப்பன் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜீவா ரஜிகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசவுள்ளனர்.
இதனை தொடர்ந்து நாளை மறுதினம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் நன்கொடை வழங்கப்பட்ட மூளாய் வைத்தியசாலையினைப் பார்வையிடுவதற்கும் நடிகர் திலகத்தின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் பாகிஸ்தானின் நெருக்கமான நட்பு நாடு... விரிவான பின்னணி News Lankasri

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
