முல்லைத்தீவில் பொது மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுண்ணாம்புசூளை வீதி திருத்தப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை மக்கள் விருப்பத்துக்கு மாறாக மாற்றியதை எதிர்த்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது, நேற்றைய தினம் (19-02-24) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டின் கீழ் 22.5 மில்லியன் ரூபா புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கென ஒதுக்கப்பட்டது.
மக்களின் கோரிக்கை
இதற்கமைய, புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்களை இணைத்து கூட்டம் நடத்தியபோது மக்கள் அனைவரும் இணைந்து அப் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட 17 இலட்சம் ரூபா நிதியை சுண்ணாம்புசூளை வீதி திருத்த பணிக்கு ஒதுக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் மக்களால் தீர்மானம் நிறைவேற்றபட்டதன் பின்னர் குறித்த நிதி வேறு தேவைக்காக மாற்றப்பட்டுள்ளதென அறிந்த மக்கள் தங்களின் வீதியினை திருத்தம் செய்ய நீதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என பிரதேச செயலகத்திடம் கோரி கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
100 பேர் வரையான மக்கள் கையில் பதாதைகளை தாங்கியவாறு பிரதான வீதி வழியாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகவாசலை மறித்து போராடியுள்ளனர்.
இதன்போது, புது குடியிருப்பு பிரதேச செயலாளர் பொது மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் அவர்களது கோரிக்கை அடங்கிய மனுவையும் பெற்றுக் கொண்டு குறித்த கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் மத்தியில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், வீதிக்குரிய நிதி போதாத காரணத்தால் அது மாற்றப்பட்டுள்ளதாக அறிகின்றேன் மக்களின் இந்த அக்கறையினை அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தி அவரின் உதவியுடன் இந்த வீதியினை திருத்துவதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 2 நாட்கள் முன்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
