வற்றாப்பளையில் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த நபர்! சிசிடிவியில் பதிவான காட்சி
முல்லைத்தீவு - வற்றாப்பளை பகுதியில் வீட்டில் இருந்தவர்கள் நித்திரையில் இருந்த வேளையில், மதிலேறி வீட்டின் வளவுக்குள் புகுந்த நபரொருவர் வீட்டின் யன்னலை உடைத்து உள்ளே நுழைந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த 16.09.2026 அன்று நள்ளிரவு 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சிசிடிவி காட்சி பதிவு
வீட்டில் இருந்தவர்கள் நித்திரையில் இருந்த நிலையில், மதிலேறி வீட்டின் வளவுக்குள் நுழைந்த நபர், அதிகாலை 2.20 மணிவரை வீட்டுக்குள் நுழைவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளமை சிசிடிவி காட்சிகள் மூலம் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து வீட்டின் யன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த குறித்த நபர், சாமியறையில் வைக்கப்பட்டிருந்த 51,000 ரூபா பணத்தையும் இரண்டு பவுண் தங்க நகைகளையும் கொள்ளையிட்டுள்ளார். வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
விசாரணை முன்னெடுப்பு
சம்பவம் தொடர்பில் உடனடியாக 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், குறித்த திருட்டில் ஈடுபட்ட நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது. சந்தேகநபரை அடையாளம் காணும் பட்சத்தில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து! கடும் கோபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் - சாரதியின் பரபரப்பு வாக்குமூலம்