பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாத எதிர்ப்பு குறித்த சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பெரும் சர்ச்சைக்குரிய 1978ம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தினை இந்த புதிய சட்டம் பதிலீடு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
இந்த உத்தேச புதிய சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் அலி சப்ரீ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை ரத்து செய்து விட்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமொன்றை அறிமுகம் செய்வதாக அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் உறுதிமொழி வழங்கியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களும் நாடுகளும் தொடர்ச்சியாக இலங்கையிடம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 நிமிடங்கள் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
