பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்: சாணக்கியன் காட்டம்

Shanakiyan Rasamanickam Sri Lankan political crisis Sri Lanka Prevention of Terrorism Act
By Dharu Dec 06, 2023 02:20 PM GMT
Report

போலியான குற்ற ஒப்புதல்களைப் பெறுவதற்கே இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாராளுமன்றில் நேற்று(05.12.2023) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

''இலங்கையில் நடைமுறையிலுள்ள மிகவும் சர்சைக்குரிய சட்டங்களில் ஒன்றான பயங்கரவாத தடைச்சட்டத்தின் காரணமாக இலங்கை பல வருடங்களாக சர்வதேசத்தில் மிகவும் கவனம் பெற்ற நாடாக காணப்படுகின்றது.

மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு! நிராகரிக்கும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு

மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு! நிராகரிக்கும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு

போலியான குற்ற ஒப்புதல்

இலங்கையில் சிவில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் பகுதி இரண்டாக ஓர் அவசரநிலைச் சட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

குறித்த ஏற்பாட்டுக்கு அமைவாக 1979 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்: சாணக்கியன் காட்டம் | Pta Act Sri Lanka Issue Shanakkiyan

தொடர்ச்சியாக ஆட்சி செய்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையான காரணங்களின்றி முஸ்லிம்களையும், தமிழர்களையும் தடுத்து வைப்பதற்கும் சித்திரவதையினைப் பயன்படுத்தி போலியான குற்ற ஒப்புதல்களைப் பெறுவதற்கும் இந்தப் பயங்கரமான சட்டத்தினைப் பயன்படுத்தி வருகின்றன.

2022 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட பெரும்பான்மையின இளைஞர்கள், இப்பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதைக் காணக் கூடியதாக இருந்தது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் எனக் கோரி 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நாடு தழுவிய கையொப்ப பிரச்சாரத்திற்கு நானும், எம் ஏ சுமந்திரனும் தலைமை தாங்கினோம்.

இந்தப் பிரச்சாரத்திற்கு நாடு முழுவதும் இருந்து பல பிரஜைகளும், செயற்பாட்டாளர்களும் மொட்டு கட்சி தவிர்ந்த சகல அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்கிருந்தன. நாட்டின் குறிப்பிட்ட பிரிவினராலும் சர்வதேச சமூகத்தினராலும் இந்தச் சட்டவாக்கம் மீண்டும் மீண்டும் கண்டிக்கப்பட்ட போதிலும் இதனை நீக்குவதற்கு இலங்கை தவறிவிட்டது.

கடந்த வருடம் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து வைப்பதற்குப் பயங்கரவாத தடைச்சட்டத்தினை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தியமை தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களுடன் சேர்ந்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனேடியப் பிரதிநிதிகள் அவர்களின் கரிசணைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

கைதான இந்திய கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

கைதான இந்திய கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

9 பேர் கைது

கடந்த வருடம் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ''ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் தாம் கரிசணை கொண்டுள்ளதாகவும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாட்டின் மீது நடப்பின் படி உண்மையான இடைநிறுத்தம் பற்றிச் சர்வதேச சமுதாயத்திற்கு இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியுள்ளதாகவும்'' குறிப்பிட்டிருந்தது.

பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்: சாணக்கியன் காட்டம் | Pta Act Sri Lanka Issue Shanakkiyan

இவ்வாறான உத்தரவாதங்களையும் தாண்டி நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வில் வைத்து 9 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் பிரஜைகளை அடக்கியொடுக்கும் அதேவேளை நல்லிணக்கம் பற்றியும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (டீஆர்சி) பற்றியும் பேசுவதன் மூலம் அரசாங்கம் சர்வதேச சமுதாயத்திரனையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவையும், தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றதா?

சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனேடிய பிரதிநிதிகள், கடந்த ஆண்டு போராட்டக்காரர்களை தடுத்து வைக்க இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியமை குறித்து தமது கவலையை வெளிப்படுத்தினர்.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் அபிவிருத்தி குறித்து கவலையடைவதாகவும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைத் தடை குறித்து சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியுள்ளதாகக் பகிரங்கமாகக் கூறியது. ஆனால் நடைமுறைப்படுத்தியதா?

இருப்பினும் இதுபோன்ற உறுதிமொழிகள் வெளிப்படையாக இருந்தும். கடந்த மாதம் நினைவேந்தல் தின நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஒன்பது பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் அனைவரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். எனவே நாட்டிற்குள் நல்லிணக்கம், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றிப் பேசி சர்வதேச சமூகத்தையும் மனித உரிமைகள் பேரவையையும் தவறாக வழிநடத்த அரசாங்கம் முயல்கிறதா?

இப்போது, பொதுப் பாதுகாப்பு அமைச்சருடன், மாண்புமிகு வெளியுறவுத் துறை அமைச்சரும் இங்கு பதிலளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

படுகொலை சதித்திட்டம்: முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

படுகொலை சதித்திட்டம்: முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மிகவும் தீவிரமான பிரச்சினை

ஏனென்றால், அமைச்சரவை அமைச்சர் என்பது வெளியுறவுத்துறைக்கான அமைச்சரவை அமைச்சர் அல்ல என்பதே எனது கருத்து. மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பொருளாதார குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் தனிப்பட்ட ஆலோசகராக அவர் இருந்ததைக் கருத்தில் கொண்டு, அந்த இலாகாவை வைத்திருப்பதற்கு அவர் தகுதியற்றவர்.

மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர்ரே , டுவிட்டரில் கடந்த வார பதிவுகளை பின்தொடர்ந்தால், அமெரிக்க தூதரகத்தின் தூதுவர் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து பதிவு செய்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்: சாணக்கியன் காட்டம் | Pta Act Sri Lanka Issue Shanakkiyan

பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் தூதுவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாடு குறித்து பதிவு செய்துள்ளார்.

இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம், கடந்த ஆண்டு போராட்டம் தொடர்பான பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி டுவிட்டரில் பதிவு செய்துள்ளது.

இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம் கனடா மற்றும் இலங்கைக்கான தூதரகம் பதிவு செய்துள்ளது. இப்போது இது மிகவும் தீவிரமான பிரச்சினை.

வெளியுறவுத்துறை அமைச்சர், நீங்கள் சர்வதேச சமூகத்திற்கு ஒரு விடயத்தை சொல்கிறீர்கள். நாட்டிற்குள் நீங்கள் அதற்கு நேர்மாறாக செய்கிறீர்கள்.

இந்த நாட்டில் தற்போது நல்லிணக்கம் இல்லை புலம் பெயர்வோரின் எண்ணிக்கையும், இந்த நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அதற்குக் காரணம் அவர்களால் இந்த நாட்டில் வாழ முடியாது. அஞ்சலி செய்ததற்க்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அங்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடிகள் எதுவும் இல்லை. அவர்களுடன் தொடர்புடைய அடையாள சின்னங்கள் எதுவும் இல்லை.

ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். 18 வயது நிரம்பிய ஒரு சிறுவன், பாடசாலை மாணவன்.

படுகொலை சதித்திட்டம்: முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

படுகொலை சதித்திட்டம்: முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நல்லிணக்க முயற்சி

அவர் செய்த ஒரே விடயம் , அந்த நிகழ்வுக்கு உபகரணங்களை வழங்கும் தனது தந்தையுடன் அவர் உடன் சென்றதா? மற்றும் அவ் நிகழ்ச்சிக்கான உபகரணங்களை வழங்கியவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கேக் விற்பனையில் ஈடுபட்ட பேக்கரி ஒன்றில் பணி புரியும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்: சாணக்கியன் காட்டம் | Pta Act Sri Lanka Issue Shanakkiyan

இப்போது இந்த நாட்டில் தமிழர்கள் எப்படி நிம்மதியாக வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? நல்லிணக்க முயற்சிகளில் அரசாங்கம் உண்மையாக நேர்மையாக செயல்படுகின்றது என்பதனை நாங்கள் எப்படி நம்புவது ?

மக்கள், கால்நடை பண்ணையாளர்கள் தங்கள் கால்நடைகளை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏனெனில் நீங்கள் அவர்களின் மேய்ச்சல் நிலங்களை கையகப்படுத்துகிறீர்கள். நீங்கள் அவர்களை நிம்மதியாக வாழ விடவில்லை.

அவர்களின் வாழ்வாதாரத்தில் கைவைக்கின்றீர்கள். தமிழ் புலனாய்வுப் பிரிவினரின் மிரட்டல், அரசாங்க மற்றும் அரச சார் கட்சிகளைத் தவிர வடக்கு, கிழக்கைச் சேர்ந்த அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுக்கின்றார்கள்." என்றார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், மாவிட்டபுரம், கிளிநொச்சி, Toronto, Canada

26 Dec, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

22 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொழும்பு, India, Toronto, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US