மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும்: சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து
நாட்டில் மாகாண சபைத் தேர்தல் கட்டாயமாக நடாத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழில் இன்று (23.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம்.
மேலும், தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ளோம்.
அத்துடன், நாட்டில் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்றும் 13ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தியுள்ளோம்” என கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |