மாகாணசபைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவரின் நிலைப்பாடு
மாகாணசபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு கிடைத்த பின்னர் தேர்தலை நடத்தும் முறை தொடர்பாக தீர்மானிக்கப்படும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்கு நாடாளுமன்றத்தில் ஊடாக தீர்வு கிடைக்க வேண்டும் என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை நடத்த சுமார் 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் பணம் செலவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை தொகுதிவாரியாக நடத்தும் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இதனால், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பழைய முறையில் தேர்தலை நடத்த நாடாளுமன்றத்தில் திருத்த யோசனை ஒன்று கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.