யாழ். தையிட்டி போராட்டத்திற்கு அதிகரிக்கும் ஆதரவு
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு - தையிட்டியில் தமிழ் மக்களின் காணியில் அடாத்தாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரையை அகற்றக்கோரி பொலிஸ் முற்றுகைக்குள் போராட்டம் நடத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு மாற்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் நேற்றைய தினம் (04.05.2023) தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.
இந்தப் போராட்டம் இன்றைய தினமும் (05.05.5023) தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகை கண்ணோட்டம்,
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri