அரிசியின் விலையில் மாற்றம் தேவை : யாழில் போராட்டம்
அரசாங்கமானது, அரிசியின் விலையை நூறு ரூபாய்க்கு கீழே குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று (09.04.2024) காலை சாவகச்சேரி பேருந்து தரிப்பு நிலையத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதாதைகள் ஏந்தியவாறு போராட்டம்
இதன்போது, பெண்கள் "அரிசியின் விலையேற்றத்தால் பசியில் வாடுகிறோம், நிறுத்து நிறுத்து, வளச் சுரண்டல்களை நிறுத்து, பொருளாதார சுமையைக் குறை, ஏழையின் வயிற்றில் அடிக்காதே, பட்டினிச் சாவு வேண்டாம், பிள்ளைகளை பசியால் வாட்டாதே" உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |