கொழும்பில் நாளை முன்னெடுக்கப்பட உள்ள மாபெரும் போராட்டம்
வடக்கு - கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்தமாறு கோரி கொழும்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து நாளை(22) காலை 9 மணியளவில் நாடாளுமன்றச் சுற்று வட்டத்தில் குறித்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.
குமணனை அச்சுறுத்துவதை நிறுத்து, வடக்கு - கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்து என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
போராட்டம்
முல்லைத்தீவைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான க.குமணனைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கடந்த 17ஆம் திகதி அளம்பில் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து சுமார் 7 மணி நேரம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.
அத்துடன் மேலதிக விசாரணைகளுக்கு அழைக்கப்படும் போது, முன்னிலையாக வேண்டும் எனவும், விசாரணை விடயங்கள் தொடர்பில் வெளியில் கூறக் கூடாது எனவும் கடுமையாக அறிவுறுத்தியே குமணன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
