மட்டக்களப்பில் நகர்ப்பகுதிக்குள் படையெடுத்த நூற்றுக்கணக்கான உழவு இயந்திரங்கள், மோட்டார்சைக்கிள்கள்(VIDEO)

Police Government Protest Batticaloa
By Kumar Nov 08, 2021 05:53 AM GMT
Report

வவுணதீவு மற்றும் ஆயித்தியமலை பகுதி விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்ட உழவு இயந்திரங்களிலும், மோட்டார்சைக்கிள்களிலும் மட்டக்களப்பு நகர் நோக்கி பவணியாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அரசாங்கம் பசளையை வழங்க வேண்டும் என கோரி இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகருக்குள் நுழைய முற்பட்ட குறித்த பேரணியை பொலிஸார் தடுத்து நிறுத்தி, குறித்த உழவு இயந்திரங்களை மட்டக்களப்பு நகருக்குள்ளே செல்ல அனுமதிக்க மறுத்துள்ளனர்.

எனினும், “தம்மை உள்ளே செல்லவிடாது மறுத்தால் தாம் வீதியை மறித்து போராட்டம் மேற்கொள்வதாகவும், தம்மை உள்ளே செல்ல விட்டால் வீதியில் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறையும் ஏற்படுத்தாமல் தமது போராட்டத்தை முன்னெடுப்பதாகவும்” போராட்டக்காரர்கள் உறுதியளித்துள்ளனர்.


இதனை தொடர்ந்து அவர்களுக்கு பொலிஸாரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

அதனை தொடர்ந்து அமைதியான முறையில் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு காந்திபூங்கா வரையில் ஊர்வலமாக வந்து பின்னர் மத்திய வீதியூடாக வாவிக்கரை வீதியை சென்றடைந்து அங்கிருந்து மாவட்ட செயலகம் வரையில் பேரணியானது சென்றுள்ளது.

மாவட்ட செயலகத்தின் வாயிற்கதவை பொலிஸார் பேருந்து கொண்டு மறித்தபோது அதற்கு எதிராக விவசாயிகள் கடுமையான ஆட்சேபனையினை தெரிவித்ததுடன், குறித்த பேருந்தை அகற்றாவிட்டால் குறித்த பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கப்போவதாகவும் விவசாயிகள் எச்சரித்ததை தொடர்ந்து குறித்த பேருந்து அங்கிருந்து அகற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து பொலிஸார் மாவட்ட செயலகத்திற்குள் செல்வதை தடுத்த போதும் முன்வாசல் ஊடாக மாவட்ட செயலக வாசல் வரையில் விவசாயிகள் கோசங்களை எழுப்பியவாறு சென்றபோதிலும் மாவட்ட செயலக உள்வாசல் கதவினை பூட்டி பொலிஸார் விவசாயிகள் உள் நுழைவதை தடுத்துள்ளனர்.

இதன்போது மாவட்ட செயலகத்திற்குள் யாரும் உள்நுழைய முடியாதவாறு வாயிற்கதவினை முற்றுகையிட்டு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் இந்த முற்றுகை போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் மகஜரையும் பெற்றுக்கொண்டதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

முற்றுமுழுதாக சேதனப்பசளை திட்டம் என்பதை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் 50வீதம் சேதனப்பசளையினை வழங்கினால் 50வீதம் யூரியாவினை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

சேதனப்பசளை திட்டத்தினை நாங்கள் எதிர்க்கவில்லை.ஆனால் முழு நிலத்திலும் சேதனப்பசளை செய்கை செய்யமுடியாது.அவ்வாறான நிலங்களுக்குகு யூரியாவினை வழங்க அரசாங்க நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

GalleryGalleryGallery
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US