மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி போராட்டம்
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நீதிகோரி போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (24.06.2024) காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.
கோரிக்கைகள் அடங்கிய மனு
இதன்போது, சர்வதேச சமூகத்திற்கு கொண்டுசெல்லும் வகையிலான கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் சங்க செயலாளரினால் வாசிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கலந்து கொண்டதுடன் ஒரு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக தகவல் - குமார்





முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri