கொழும்பில் தொடரும் போராட்டம்: வீதித்தடைகளை அகற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் - பொலிஸார் குவிப்பு (Video)
கொழும்பில் சேர் பாரோல் ஜயதிலக மாவத்தை பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் போடப்பட்டிருந்த வீதித்தடைகளை அகற்றியுள்ளனர்.
காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்களே கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்பு இன்று காலை போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை பிரயோக வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.



முதலாம் இணைப்பு
கொழும்பு - காலிமுகத்திடல் பகுதியில் மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு பிரதான காரணம் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ என தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்களே கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்பு இன்றைய தினம் குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நுழைவாயில் பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 15 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri