உத்தேச 21ம் திருத்தச் சட்டம் மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு
உத்தேச 21ம் திருத்தச் சட்டம் இன்றைய தினம் அமைச்சரவையில் மீண்டும் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அமைச்சரவை அனுமதி
அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு உத்தேச 21ம் திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
உத்தேச 21ம் திருத்தச் சட்ட வரைவு பல சந்தர்ப்பங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பின்னர் மீண்டும் அமைச்சரவையில் இந்த வரைவுச் சட்டத்தை சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும்
இன்றைய தினம் 21ம் திருத்தச் சட்டத்திற்கு அனுமதி கிடைக்கப் பெற்றால், வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தேச 21ம் திருத்தச் சட்ட வரைவு வெளியிடப்படும்.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட 21ம் திருத்தச் சட்ட வரைவு பல்வேறு திருத்தங்களுடன் இன்று மீளவும் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan