சிறுவர் இல்ல சர்ச்சைகள் குறித்து ஆராய நடவடிக்கை!
சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் தொடர்பில் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தால் கிராம அலுவலர் பிரிவு ரீதியாக ஆராயும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வடக்கிலுள்ள சகல பிரதேச செயலர்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்புச் சேவைகள் திணைக்களத்தால் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள், தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்ட பகல் பராமரிப்பு நிலையங்கள், தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்ட விடுதிகள் ஆகியவற்றின் விபரம் பிரதேச செயலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உரிய அனுமதி பெற வேண்டும்
அந்த விபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிராம அலுவலர் பிரிவுகளில் இயங்கும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் ஏதாவது நிலையத்தில் சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தால் அந்த நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்கள் தொடர்பாகவும், அதன் நிர்வாகம் தொடர்பாகவும் கிராம அலுவலர் மூலமான விவரங்களைப் பெற்று அனுப்பிவைக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, எதிர்காலங்களில் புதிதாக
சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள், பாலர் பகல் பராமரிப்பு
நிலையங்கள், விடுதிகள் போன்று ஆரம்பித்திருப்பின் அவை
பற்றிய விபரங்களை உடனுக்குடன் எமக்கு அனுப்பி வைக்குமாறும் அந்தக் கடிதத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 18 மணி நேரம் முன்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri
