இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள தடை! விரைவில் புதிய மாற்றம்
நாட்டில் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் உணவுப் பொதிகள் சுற்ற பயன்படுத்தப்படும் பொலித்தீன்கள் உள்ளிட்ட மக்காத பொருட்களுக்கு தடை விதிக்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பின் ஊடாக சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருட்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், லங்கா சதொச நிறுவனத்தினால் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை வழங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடர்பாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோருக்கிடையில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி, லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக மாற்றுச் சூழலுக்கு உகந்த உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan