தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை! யாழ். நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் இன்றையதினம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையுத்தரவு விதிக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.
இந்த நிலையில் பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், கோவிட் தொற்று பரவல் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்திற்கு அமைய இந்த நிகழ்வுக்கு தடை விதிக்குமாறு பொலிஸார் நீதிமன்றிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்..
கஜேந்திரன் எம்.பியை இழுத்துச் செல்லும் பொலிஸார் - பெண்களுடன் முறுகல்! பரபரப்பு காணொளி
யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் திடீர் கைது
தியாகதீபம் திலீபனின் சுடரை சப்பாத்து கால்களால் மிதித்த பொலிஸார்! - கனகரத்தினம் சுகாஸ்