பொய்யுரைத்த ஜனாதிபதி : அநுரவே ஏற்றுக் கொண்டதாக செஹான் அறிவிப்பு
குறுகிய அரசியல் வெற்றிக்காக தான் பொய்யுரைத்ததை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார் என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் இன்று (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்தோம் என்று குறிப்பிடும் தார்மீக உரிமை ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் கிடையாது.
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை எவ்வித மாற்றமுமில்லாமல் முன்னெடுப்பதாக குறிப்பிடும் ஜனாதிபதி கடந்த காலங்களில் நாணய நிதியத்தின் செயற்திட்டத்துக்கு முழுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
நாணய நிதியத்தின் செயற்திட்டம்
நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கொழும்புக்கு வருகை தந்த போது நிதியமைச்சின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தினார்.
பொருளாதார மீட்சிக்கான நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை முழுமையாக செயற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
You May Like This
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
