தரமற்ற மின் சாதனங்களால் அதிகரிக்கும் உயிரிழப்பு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் மீண்டும் தரமற்ற மின் சாதனங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து மொரட்டுவ பல்கலைக்கழகம், நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணையம் இடையே கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
தரமற்ற மின் சாதனங்கள் பயன்பாடு
தரமற்ற மின் சாதனங்களை பயன்படுத்துவதால் மின்சார அதிர்ச்சியினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க, மின் சாதனங்களுக்கு உற்பத்திக்கு தரச்சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் தரமற்ற மின் சாதனங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

அதன்படி, குறைந்தபட்ச தரத்துடன் தரமற்ற பிளக்குகள், அடாப்டர்கள், மின் மாற்றிகள், கேபிள் ரீல்கள் போன்றவற்றை உற்பத்தி செய்வதைத் தடுக்க, நுகர்வோர் விவகார அதிகாரசபை டிசம்பர் 07, 2017 அன்று 2048/39 என்ற வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டு, அவற்றுக்கு இலங்கை தரச் சான்றிதழை கட்டாயமாக்கியிருந்தது.
அதிக இலாபத்தை ஈட்டியுள்ள நிறுவனங்கள்
இந்த வர்த்தமானி அறிவிப்பின்படி, பல மின் சாதனங்களுக்கான உற்பத்தி மற்றும் விற்பனைக்கு இலங்கை தரச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பல நிறுவனங்கள் தரமற்ற மின் சாதனங்களை உற்பத்தி செய்வதன் மூலம் அதிக இலாபத்தை ஈட்டியுள்ளன என்று விவாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மேற்கூறிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும், நுகர்வோர் விவகார அதிகாரசபை எந்தவொரு சோதனைகளையும் நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.