இலங்கையில் நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை
இலங்கையில் 4 கட்டங்களின் கீழ் பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் பியல் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய முதல் கட்டமாக 200 இற்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பாடசாலைகளில் முதலாம் மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இரண்டாவது கட்டமாக 200 இற்கும் குறைவான மாணவர்கள் கொண்ட அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாம் கட்டமாக சாதாரண தரம் மற்றும் உயர் தர மாணவர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நான்றாம் கட்டமாக அனைத்து பாடசாலைகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒக்டோபர் மாத இறுதியில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான முழுமையான வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam