போகம்பரை சிறைச்சாலையில் கைதிகள் போராட்டம்
போகம்பரை சிறைச்சாலையின் கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்பட வேண்டுமென கோரியே இவ்வாறு போராடி வருகின்றனர்.
போகம்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 20 கைதிகள் இவ்வாறு போராடி வருவதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் கொவிட் நோய்த் தொற்று பரவி வரும் நிலையில் தங்களுக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.
கைதிகளின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.