வவுனியா சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீர் மரணம்
வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியல் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம், நேற்று முன்தினம் (23.11.2024) இரவு இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த கைதி நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் கடந்த 19 ஆம் திகதி முதல் சிறைவைக்கப்பட்டிருந்தார்.
வழக்கு விசாரணை
இந்நிலையில், எதிர்வரும் 3 ஆம் திகதி வழக்கு விசாரணை இடம்பெற இருந்த நிலையில் அவர், மரணமடைந்துள்ளார்.

வவுனியா, செட்டிகுளம் பகுதியை சேர்ந்த 57 வயதான நபரே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி பதில் நீதவான் த. அருள் சிறைச்சாலைக்கு சென்று சம்பவம் இடம்பெற்ற இடத்தை பார்வையிட்டதுடன், விசாரணைகளையும் நடத்தியுள்ளார்.
அத்துடன் வவுனியா வைத்தியசாலைக்கும் சென்று சடலத்தை பார்வையிட்டு, சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூற்று பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam