சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணிகள் இலங்கை இராணுவத்திற்கு
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வழங்கும் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகளை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இராணுவம் மேற்கொள்ளும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் சுமித் அழககோன் தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்று தற்போது மேற்கொண்டு வரும் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பரிந்துரைக்கு அமைய இலங்கை இராணுவத்திற்கு வழங்க கடந்த ஜூலை மாதம் அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்தது.
மாதாந்தம் 50 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரையில் சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதாக ஆணையாளர் கூறியுள்ளார்.
இந்த பணிகளை இராணுவம் மேற்கொள்ள உள்ளதால், அனுமதிப் பத்திரங்களை அச்சிட அரசாங்கத்திற்கு செலவாகும் பணத்தை மீதப்படுத்த முடியும் என சுமித் அழககோன் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan