தீக்கிரையாக்கப்பட்டுள்ள இளவரசி டயானாவின் பண்ணை வீடு: எழுந்துள்ள சந்தேகம்
மறைந்த இளவரசி டயானா வளர்ந்த அல்தார்ப் எஸ்டேட் வளாகத்தில் உள்ள ஒரு பண்ணை வீடு தீயில் முற்றிலும் அழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் இங்கிலாந்தின் கிங்ஸ்டோர்பில் உள்ள மில் லேன் பகுதியில் இடம்பெற்றதாக நார்தாம்ப்டன்ஷயர் தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.
எழுந்துள்ள சந்தேகம்
தீ விபத்தில் கட்டடம் முழுவதுமாக எரிந்த நிலையில், இது திட்டமிட்ட தீவைத்தல் ஆக இருக்கலாம் என டயானாவின் சகோதரரும், எஸ்டேட் உரிமையாளருமான ஏர்ல் சார்ல்ஸ் ஸ்பென்சர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்.
Stunned to learn that one of @AlthorpHouse’s farmhouses - fortunately, unoccupied at the time - was apparently burnt down by vandals last night. With thanks to @northantsfire for doing their very best.
— Charles Spencer (@cspencer1508) May 28, 2025
So very sad that anyone would think this a fun thing to do. pic.twitter.com/lYyvkzJLnA
“யாராவது இதைப் பொழுதுபோக்கு என நினைத்தது வேதனையளிக்கிறது,” எனவும், தீயணைப்புத் துறையின் அயராத முயற்சிகளுக்கு நன்றியுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த தீயை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு குழுக்கள் இணைந்து செயல்பட்டன.
டயானாவின் குழந்தை பருவம்
மேலும், ஒரு குழு நீர் தெளிக்கும் வாகனத்துடன் தீப்பொறிகளை முற்றிலும் அணைக்க பிற்பகல் 1 மணிவரை இடத்தில் தங்கியிருந்தது.
தீயில் சிக்கிய பண்ணை வீடு, அல்தார்ப் ஹவுஸிலிருந்து சுமார் 5 மைல்கள் தொலைவில் உள்ளது.
இந்த அல்தார்ப் எஸ்டேட்டில்தான் இளவரசி டயானா தனது குழந்தை பருவத்தை கழித்ததுடன், அதே வளாகத்தில்தான் அவரது நினைவிடமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

சாம்சங்கில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற நபர் யார்? News Lankasri

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம் Cineulagam

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri
