ஏலத்திற்கு வரவுள்ள இளவரசி டயானாவின் ஆடைகள்
உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பப்பட்ட பிரிட்டனின் இளவரசி டயானா அணிந்திருந்த பல ஆடைகள் ஏலத்தில் விட திட்டமிடப்பட்டுள்ளன.
இது கலிபோர்னியாவில் உள்ள பிரபலமான ஜூலியன் ஏல நிறுவனத்தால் விற்கப்படவுள்ளது.
கைப்பைகள் உட்பட 100 பொருட்கள்
ஆகஸ்ட் 31, 1997 அன்று பிரான்சில் நடந்த ஒரு கார் விபத்தில் அவர் காலமான நிலையில் தற்போது இளவரசி டயானாவைப் பற்றிய பேச்சு மீண்டும் வந்துள்ளது.
பிரபலமான ஜூலியன் ஏல நிறுவனம் இளவரசி டயானாவுக்குச் சொந்தமான பல ஆடைகளை ஏலத்தில் விட திட்டமிட்டுள்ள நிலையில். டயானாவின் ஸ்டைல் மற்றும் றோயல் கலெக்ஷன் என்ற தலைப்பில் ஏலம் ஜூன் 26 அன்று நடைபெற உள்ளது.
இது கலிபோர்னியாவில் உள்ள பெனிசுலா பெவர்லி ஹில்ஸில் உள்ளது.
வாங்குபவர்கள் இளவரசி டயானா அணிந்திருந்த அழகான உடைகள் தொப்பிகள் மற்றும் காலணிகள் மற்றும் அவர் பயன்படுத்திய விலையுயர்ந்த கைப்பைகள் உட்பட 100 பொருட்களை ஏலம் எடுத்து வாங்க வாய்ப்பு கிடைக்க உள்ளது.
200,000 முதல் 300,000 அமெரிக்க டொலர்கள்
ஜூலியன் ஏல நிர்வாக இயக்குநரும் இணை நிறுவனருமான மார்ட்டின் நோலனின் கூற்றுப்படி, இளவரசி டயானாவுக்குச் சொந்தமான அதிக எண்ணிக்கையிலான பொருட்கள் ஒரே நேரத்தில் ஏலம் விடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களில் பல தனித்துவமான பொருட்களும் உள்ளன.
அவற்றில் ஒன்று 1988இல் தயாரிக்கப்பட்ட 'கேரிங் டிரஸ்' என்று அழைக்கப்படும் நீல நிற பட்டு உடை.
ஏல நிறுவனம் 200,000 முதல் 300,000 அமெரிக்க டொலர்களுக்கு இடையில் விற்கப்படும் என்று கூறுகிறது.
ஏலத்தில் 1995 ஆம் ஆண்டில் அப்போதைய பிரெஞ்சு முதல் பெண்மணியிடமிருந்து இளவரசி டயானா பரிசாகப் பெற்ற கைப்பை, அவரது திருமண உடையில் இளவரசி டயானாவின் புகைப்படம் மற்றும் ராணி எலிசபெத் II மற்றும் பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த பல பொருட்களும் அடங்கும்.
ஏலத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி பிரிட்டனின் தசைநார் சிதைவு சங்கத்திற்குச் செல்லும் என்று ஜூலியன் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri
