மகிந்தவின் பதவி விலகல் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல்
பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவி இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்குச் இன்று சென்ற பிரதமர் மகிந்த ராஜபக்ச பின்னர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியிருந்தது.
இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த பிரதமரது இணைப்பு செயலாளர் கீதநாத் காசிலிங்கம் இதுவரைக்கும் அவ்வாறான கடிதம் எதுவும் பிரதமரால் ஜனாதிபதிக்கு அனுப்பப்படவில்லையென தெரிவித்தார்.
இருப்பினும்,நாளைய தினம் அலரிமாளிகையில் கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் பிரதமர் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்தப் பிரதமர் பதவி எனக்குப் பெரிய விடயமல்ல.மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தாலும் பிரதமராக இருந்தாலும் அல்லது வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், மகிந்த ராஜபக்சவே என நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச உரையாற்றிய பழைய காணொளி ஒன்றை நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#MahindaRajapaksa pic.twitter.com/SQrz3vH4Mk
— Namal Rajapaksa (@RajapaksaNamal) May 8, 2022

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
