பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பது மிகவும் கவலைக்குரியது:சனத் ஜயசூரிய
போராட்டகாரர்கள் அதிகளவில் கைது செய்யப்படுவது மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிலரை தடுத்து வைத்துள்ளமை என்பன மிகவும் கவலைக்குரிய விடயங்கள் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாடு மெதுவாக வழமை நிலைமைக்கு திரும்புகிறது
நாடு தற்போது மெதுவாக வழமையான நிலைமைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது எனவும் பின்நோக்கி செல்லாமல் முன்நோக்கி செல்ல வேண்டிய காலம் இது எனவும் சனத் ஜயசூரிய கூறியுள்ளார்.
தவறு செய்தால் மன்னிப்பது மனித தன்மை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சனத் ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இதனை கூறியுள்ளார்.
It is deeply concerning to see so many arrests of protesters and detaining some under terrorism laws. We are slowly limping to normalcy. This is the time to look forward not backwards. To err is human to forgive devine.
— Sanath Jayasuriya (@Sanath07) August 22, 2022
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி முதல் கடந்த ஜூலை 9 ஆம் திகதி வரை நாட்டில் நடந்து வந்த பாரிய எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துக்கொண்டவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கடும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




