பாடசாலை மாணவர்களிடையே பரவும் மூளைக்காய்ச்சல் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பாடசாலை மாணவர்களிடையே தற்போது வைரஸ் மூளைக்காய்ச்சல் நோய்கள் பரவி வருவதாகவும், இதுகுறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் வைத்திய நிபுணர் பாலித கருணபெம தெரிவித்துள்ளார்.
தெனியாயவில் முதலில் பதிவான இந்த மூளைக்காய்ச்சல் பரவல், தற்போது பல பகுதிகளில் இருந்தும் பதிவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நோய் அறிகுறிகள்
அதன்படி, தியதலாவவில் 28 நோயாளிகளும், வெலிமடையில் 13 நோயாளிகளும், கண்டியில் 25 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாகவும் ஊடகங்களிடம் அவர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இது ஒரு வைரஸ் மூளைக்காய்ச்சல் பரவல் என்றும், இது தொடர்பாக நோய்ப்பரவலியல் பிரிவும் மாகாண சுகாதார அதிகாரிகளும் முறையான விசாரணையையும் கண்காணிப்பையும் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களிடையே இந்த நோய் அதிகமாகப் பரவியுள்ளதாகவும், இதன் அறிகுறிகளாக அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும் என்றும் மேலும் கூறியுள்ளார்.
இருப்பினும், முறையான சிகிச்சையின் மூலம் இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்றும், சிகிச்சையின் மூலம் இந்த நோய் 5-7 நாட்களுக்குள் குணமாகிவிடும். இது குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நீர் மற்றும் உணவு மூலம் பரவும் நோய்
இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, தேவையற்ற அச்சத்தை உருவாக்க வேண்டாம். இந்த நோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.

தற்போது பெய்து வரும் மழையும், வெசாக் பண்டிகைக்காலத்தில் நடைபெறும் தானசாலைகளையும் கருத்தில் கொண்டு, அனைவரும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பாக, அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலம் இந்த நோய் பரவுவதால், கவனமாக இருக்குமாறும், முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள தாக்கம்! வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்