உடனடியாக பெற்றுக்கொள்ளவும்..! வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தால் அச்சிடப்பட்ட சுமார் ஒரு இலட்சம் வாகன பதிவுத்தகடுகள் திணைக்களத்தின் வளாகத்தில் குவிந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட வாகன பதிவுத்தகடுகளை வாகன உரிமையாளர்கள் இன்னும் பெற்றுக்கொள்ளாத நிலையில் வளாகத்தில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்
கொழும்பு மாவட்டம் தொடர்பாக, நாரஹேன்பிட்டவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலும், நாடு முழுவதும் உள்ள ஏனைய மாவட்ட அலுவலகங்களிலும் அதிக எண்ணிக்கையிலான வாகனப் பதிவுத் தகடுகள் குவிந்துள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

அதன்படி, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் வாகனப் பதிவுத் தகடுகளுக்கு விண்ணப்பித்து, இன்னும் அவற்றைப் பெறாத அனைத்து வாகன உரிமையாளர்களும் தங்களது வாகனப்பதிவுத் தகடுகளை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
30 ஜூன் 2026க்கு முன்னர் நாரஹேன்பிட்ட தலைமை அலுவலகத்திலிருந்தும், ஏனைய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலகங்களில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் கிளைகளிலிருந்தும் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இது தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ அல்லது கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டாலோ, 011-203 33 33 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக வெளியேறுங்கள் - பல மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை