இலங்கையில் மோசமடையும் வானிலை - பல பகுதிகளில் திடீர் மின்தடை
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது.
சில முக்கிய மின்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே மின்தடை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றது.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்றது.
இதன் காரணமாக தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த சில மணித்தியாலங்களிலும் தொடர்ச்சியாக கன மழை பெய்வதற்கான சாத்தியங்கள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஆறு மாவட்டங்களில் உள்ள 16 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக வெளியேறுங்கள் - பல மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
விஜய் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத விஷயத்தை கூறிய இயக்குனர் லிங்குசாமி... என்ன தெரியுமா? Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan