அரசாங்கம் விதித்துள்ள தடை! குற்றம் சுமத்தும் தயாசிறி
வெளிவிவகார அமைச்சரின் அனுமதியின்றி அமைச்சர்கள் வெளிநாட்டு தூவர்களை சந்திப்பதற்கு தடைவிதித்து ஜனாதிபதியின் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
“வெளிவிவகார அமைச்சரின் அனுமதியின்றி அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் ஆளுநர்கள் வெளிநாட்டு தூதரகங்களின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்திப்பதைத் தடைசெய்து ஜனாதிபதியின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர்களுக்கு ஏன் இந்தக் கட்டுப்பாடுகள்
அமைச்சர்களுக்கு ஏன் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்று நாம் ஆச்சரியப்படுகிறோம் என தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார். இது வடகொரிய ஆட்சி பாணியிலான நடவடிக்கையாகும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க அதனை நிராகரித்ததுடன் நேற்று இராஜதந்திரியை சந்தித்ததாக தெரிவித்தார்.
சிறிது நேரத்திற்கு முன்பு நான் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தேன். அவர் இன்னும் நாடாளுமன்ற வளாகத்திலேயே இருக்கிறார். நான் அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த முடியும்” என்று சபைத் தலைவர் ரத்நாயக்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam