அரசாங்கம் விதித்துள்ள தடை! குற்றம் சுமத்தும் தயாசிறி
வெளிவிவகார அமைச்சரின் அனுமதியின்றி அமைச்சர்கள் வெளிநாட்டு தூவர்களை சந்திப்பதற்கு தடைவிதித்து ஜனாதிபதியின் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
“வெளிவிவகார அமைச்சரின் அனுமதியின்றி அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் ஆளுநர்கள் வெளிநாட்டு தூதரகங்களின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்திப்பதைத் தடைசெய்து ஜனாதிபதியின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர்களுக்கு ஏன் இந்தக் கட்டுப்பாடுகள்
அமைச்சர்களுக்கு ஏன் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்று நாம் ஆச்சரியப்படுகிறோம் என தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார். இது வடகொரிய ஆட்சி பாணியிலான நடவடிக்கையாகும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க அதனை நிராகரித்ததுடன் நேற்று இராஜதந்திரியை சந்தித்ததாக தெரிவித்தார்.
சிறிது நேரத்திற்கு முன்பு நான் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தேன். அவர் இன்னும் நாடாளுமன்ற வளாகத்திலேயே இருக்கிறார். நான் அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த முடியும்” என்று சபைத் தலைவர் ரத்நாயக்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
