அரசாங்கம் விதித்துள்ள தடை! குற்றம் சுமத்தும் தயாசிறி
வெளிவிவகார அமைச்சரின் அனுமதியின்றி அமைச்சர்கள் வெளிநாட்டு தூவர்களை சந்திப்பதற்கு தடைவிதித்து ஜனாதிபதியின் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
“வெளிவிவகார அமைச்சரின் அனுமதியின்றி அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் ஆளுநர்கள் வெளிநாட்டு தூதரகங்களின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்திப்பதைத் தடைசெய்து ஜனாதிபதியின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர்களுக்கு ஏன் இந்தக் கட்டுப்பாடுகள்
அமைச்சர்களுக்கு ஏன் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்று நாம் ஆச்சரியப்படுகிறோம் என தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார். இது வடகொரிய ஆட்சி பாணியிலான நடவடிக்கையாகும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க அதனை நிராகரித்ததுடன் நேற்று இராஜதந்திரியை சந்தித்ததாக தெரிவித்தார்.
சிறிது நேரத்திற்கு முன்பு நான் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தேன். அவர் இன்னும் நாடாளுமன்ற வளாகத்திலேயே இருக்கிறார். நான் அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த முடியும்” என்று சபைத் தலைவர் ரத்நாயக்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam