எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு விஜயம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிக விரைவில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கைக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளது.
ஜூலை 10ம் திகதிக்கு பின்னர்
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை 10ம் திகதிக்குப் பின்னர் நாடு தழுவிய ரீதியில் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.