திடீரென சபைக்கு வந்த ஜனாதிபதி! நாடாளுமன்றில் இருந்து வெளியேறிய பலர்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்றையதினம்(17.06.2025) நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்துள்ளனர்.
சபையில், எதிர்க்கட்சி சார்பில் 5 தமிழ் உறுப்பினர்கள் மாத்திரமே உள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
வெளிநடப்பு
இதன்போது, ஜனாதிபதி சபைக்கு வந்த நிலையில், இன்று நாங்கள் மாத்திரமே உள்ளோம் என சாணக்கியன் தெரிவித்தார்.
அத்துடன், நாங்களும் வெளிநடப்பு செய்திருந்தால் உங்களுக்கு விவாதத்தை நடத்த முடியாது போயிருக்கும் என அவர் கிண்டலாகக் கூறினார்.
இதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் சுயாதீனமானதும் நியாயமானதுமான விசாரணை நடைபெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தேர்தலுக்கு முன்னர் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறிய தேசிய மக்கள் சக்தி, இன்று மட்டக்களப்பில் சபை ஒன்றை கைப்பற்றுவதற்காக பிள்ளையான் குழுவினருடன் கூட்டு சேர்ந்துள்ளனர்.
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், கொலையில் சம்பந்தப்பட்டது பிள்ளையான் குழுவினர் என அனைவரும் அறிந்ததே. இவ்வாறிருக்க, எவ்வாறு அதே தரப்பினருடன் அரசாங்கம் கூட்டணி அமைத்துள்ளது” என வினவியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
