ராஜபக்சர்களை நிராகரிக்கக் கூறிய நிமல் லான்சாவை நிராகரித்த ஜனாதிபதி ரணில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவின்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா (Nimal Lanza) முன்வைத்த பரிந்துரையை ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தரப்பினர் நிராகரித்துள்ளனர்.
மகிந்த, பசில், நாமல் மற்றும் சமல் ஆகிய அனைத்து ராஜபக்சக்களுடன் தொடர்பு கொள்வதை விட்டுவிடுவதே சிறந்தது என்பதோடு இதன்மூலம் ரணிலுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என யோசனை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
எனினும், அந்த பரிந்துரையை ரணிலும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோர் நிராகரித்துள்ளனர்.
லான்சா முன்னதாக பசில் ராஜபக்சவின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக இருந்துள்ளதோடு ரணில் ஜனாதிபதியாக பதவியேற்றதும் ஜனாதிபதி செயலகத்தில் அலுவலக இடத்தை பெற்றுக்கொண்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு ரணிலுக்கு இருப்பதாகவும், அவர்கள் உரிய நேரத்தில் இணைந்து கொள்வார்கள் என்றும் வான்சா குறிப்பிட்டுள்ள நிலையில் அது நிறைவேறவில்லை.
இந்தநிலையிலேயே லான்சாவின் பரிந்துரையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 4 மணி நேரம் முன்

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri
